பென்னசில்லின் V (Penicillin V)

Penicillin V [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பென்னசில்லின் V என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து.

உங்கள் பிள்ளை பென்னசில்லின் V என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பென்னசில்லின் V மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

பென்னசில்லின் V என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள், பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை செய்வதற்காக உபயோகிக்கப்படுகின்றன.

பென்னசில்லின் V மாத்திரை மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கின்றன.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு

உங்கள் பிள்ளைக்கு பென்னசில்லின் அல்லது வேறு அன்டிபையோடிக் மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளுள் ஏதாவது இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளருடன் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளுள் ஏதாவது இருந்தால் இது அவனு(ளு)க்குத் தகுதியான மருந்தாக இருக்கமுடியாது:

  • சிறுநீரக நோய்

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு பென்னசில்லின் V மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு பீடீயஸோல் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடும் காலம் வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, பீடீயஸோல் மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஒவ்வொரு நாளும் அதே நேரங்களில், ஒழுங்கான இடைவெளியில் பென்னசில்லின் V மருந்தைக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு பென்னசில்லின் V மருந்தை வெறும் வயிற்றில், முடிந்தால் ( உணவுக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக அல்லது உணவுக்கு 2 மணி நேரங்களுக்குப் பின்பு) கொடுக்கவும். பென்னசில்லின் V மருந்து உங்கள் பிள்ளைக்கு வயிற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தினால் , இந்த மருந்தை உணவுடன் கொடுக்கலாம்.
  • பென்னசில்லின் V திரவ மருந்து ஒவ்வொரு உபயோகத்தின் முன்பு நன்கு குலுக்கப்பட வேண்டும். வேளை மருந்து, மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாய் (ஓரல் ஸ்ரிஞ்) மூலமாக அளக்கப்படவேண்டும்.
  • பென்னசில்லின் V மாத்திரைகள் முழுமையாக ஒரு முழு கிளாஸ் தண்ணீருடன் விழுங்கப்படலாம் அல்லது நசுக்கப்பட்டு திரவத்துடன் அல்லது சிறிதளவு உணவுடன் கலக்கப்பட்டு விழுங்கப்படலாம்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது?

உங்கள் பிள்ளை நிவாரணமடைவதற்கு இந்த மருந்தை உட்கொள்ளத் தொடங்கி அநேக நாட்கள் செல்லலாம். முழுப்பலனைக் காண்பதற்கு மேலும் பல நாட்கள் செல்லலாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை பென்னசில்லின் V மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • வயிற்றுவலி அல்லது மார்பு எரிச்சல்
  • வயிற்றுக் குழப்பம், வாந்தி அல்லது இலேசான வயிற்றுப்போக்கு(மலம் தண்ணீர் போல கழிதல்)

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அலுவலக நேரங்களில் அழைக்கவும்:

  • நிலைமையில் முன்னேற்றமில்லை அல்லது உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமாகிறது என நீங்கள் நம்பினால்
  • இலேசான தோற்படை

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • முகம், உதடுகள், அல்லது தொண்டையில் வீக்கம்
  • கடுமையான மயக்க உணர்வு அல்லது மயக்கமடைதல்
  • சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம், மூச்சு வாங்குதல், அல்லது ஒரு மோசமான இருமல்
  • கடுமையான வயிற்றுக் குமட்டல் அல்லது வாந்தி அல்லது கடுமையான தண்ணீர் போன்ற வயிற்றுப்போக்கு( அதில் இரத்தம் அல்லது சிவப்புக் கோடுகள் இருக்கலாம்)
  • அசாதாரண நசுக்குக் காயம் அல்லது இரத்தக் கசிவு
  • கடுமையான தோற்படை, அரிப்பு

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

பென்னசில்லின் V மருந்து உட்கொள்ளும்போது, அல்லது அன்டிபையோடிக் செயற்பாடு முடிவடைந்து 7 நாட்களுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டு மருந்துகள் தகுந்த முறையில் வேலை செய்யாது. உங்கள் பிள்ளை குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், தயவுசெய்து அவளின் மருத்துவர்/மருந்தாளரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோய் இருந்தால், பென்னசில்லின் மருந்து சில சிறுநீரக குளுக்கோஸ்(சீனி) பரிசோதனைகளுக்கு தவறான முடிவுகளைக் காண்பிக்கும். வேறு என்ன குளுக்கோஸ் பரிசோதனைகள் செய்யலாம் என்பதை உங்கள் பிள்ளையின் மருந்தாளரிடம் கேட்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.P>

மருந்தெழுதிக் கொடுக்கப்பட்ட காலம் முழுவதும் நீடிக்கக்கூடிய போதியளவு பென்னசில்லின் V மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். தேவைப்பட்டால், உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

பென்னசில்லின் V மாத்திரைகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்க வேண்டாம்.

பென்னசில்லின் V திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். இந்த மருந்தை உறை நிலையில் வைக்கவேண்டாம். உபயோகிக்காத பகுதித் திரவமருந்தை 2 வாரங்களில் பின்னர் எறிந்து விடவும்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

பென்னசில்லின் V மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான பென்னசில்லின் V மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது பென்னசில்லின் V மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. பென்னசில்லின் V மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: March 13 2010